Ad Widget

சீனாவில் இருந்தும் கொரோனா தடுப்பூசிகளைப் பெறவுள்ள இலங்கை!

சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் குப்பிகளை இலங்கை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் சீனா 3 இலட்சம் குப்பிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts