Ad Widget

சிவாஜிக்கு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு அழைப்பு

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 27 ஆம் திகதி அதாவது நாளை குறித்த பிரிவின் கொழும்பு நன்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதாக விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்று சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னைய ஆட்சிக் காலங்களிலும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயங்கரவாதப் பிரிவினரால் சிவாஜிலிங்கம் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts