Ad Widget

சிற்றுண்டி விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்துள்ளதாக யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

அதன்படி யாழ்.நகரில் இயங்கும் ஏ தர உணவு நிலையங்களில் 15 ரூபாவுக்கு விற்ற தேநீர் 10 ரூபாய்க்கும், 30 ரூபா விற்ற பால் தேநீர் 25 ரூபாய்க்கும், பசுப்பால் தேநீர் 30 ரூபாவுக்கும், 20 ரூபா விற்ற சாதாரண வடை 15 ரூபாவாகவும், 30 ரூபா விற்ற பெரிய வடை 25 ரூபாவாகவும், கோதுமை மாவில் செய்த பெரிய 20 ரூபா ரொட்டி 15 ரூபாவாகவும் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.

புதிய அரசு அத்தியாவசியமான பொருள்களின் விலையைக் குறைத்ததை அடுத்து சிற்றுண்டி வியாபாரிகள் யாழ்.வணிகர் கழகத்துடன் சந்தித்துக் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

யாழ்.நகருக்கு வெளியேயுள்ள சிறுநகர, கிராமங்களில் ஏற்கனவேயுள்ள விலையை விடவும் அவர்கள் தாமாகவே முன்வந்து விலை குறைப்பைச் செய்ய வேண்டும். விலை குறைப்பால் எல்லோரும் பயன்பெற வேண்டும். என்று ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.

Related Posts