Ad Widget

சிற்றுண்டிச்சாலைகளிலும் விலை குறைப்பு

சிற்றுண்டிச்சாலைகளிலும் இன்று (02) திங்கட்கிழமை முதல் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி மதிய உணவுப் பொதி மற்றும் கொத்து ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. பிளேன் ரீ ஒன்றின் விலை 10 ரூபாவாகும். ரீ 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. அப்பத்தின் நிர்ணயவிலை 10 ரூபாவாகும்.

திருத்தியமைக்கப்பட்ட விலைப்பட்டியல் அனைத்தும் சிற்றுண்டிச்சாலைகளிலும் வைக்கப்பட வேண்டுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

எரிபொருட்கள் மற்றும் 13 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டமையால் நுகர்வோர் பயன்பெறும் விதத்திலேயே சிற்றுண்டிச்சாலை உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts