Ad Widget

சிறையிலிருந்து விடுதலையானவர் 4 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாதி 6 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியவர், 4 நாட்களின் பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சி பூநகரியில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

பூநகரி வேரவிலைச் சேர்ந்த வன்னியசிங்கம் யஸ்ரின்பிலிப் (வயது 31) என்பவரே உயிரிழந்தார்.

இது பற்றி தெரியவருவதாவது, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர், சிறைத்தண்டனை பெற்று கடந்த 8 ஆம் திகதி விடுதலையானார்.

கடந்த 10 ஆம் திகதி பளைப் பகுதியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை தனது நண்பருடன் பார்வையிட்ட பின்னர், வீடு திரும்பும் வழியில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் படுகாயங்களுக்குள்ளாகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். விடுதலையானவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.

Related Posts