Ad Widget

சிறுவர் தொழிலாளிகளை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்த நடவடிக்கை – அரச அதிபர்

dak-suntharam-arumainayagam-GAபாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 14வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் தமது கல்விச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி தொழில்களில் ஈடுபடும் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைத்து அவர்களுக்கும் கல்விச் செயற்பாட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததுடன் சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தச் செய்வதும் சிறுவர் துஸ்பிரயோகமே என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகம் தற்போது அதிகளவில் பாடசாலைகளிலே இடம்பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது தனியார் வகுப்புக்களிலும் பாடசாலைகளிலும் போதைவஸ்து பாவனையும் இடம்பெற்று வருவதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் நடாத்த தடை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related Posts