Ad Widget

சிறுவனை மோதிய விமான படை வீரருக்கு அபராதம்

புன்னாலைக்கட்டுவன் குரும்பசிட்டி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி சிறுவன் ஒருவரை மோதிய விமானப்படையின் வாகன சாரதிக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் செவ்வாய்க்கிழமைi (24) தீர்ப்பளித்தார்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் குடும்பத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதவான் பணித்தார்.

இந்த விபத்தில் ஏழாலை தெற்கைச் சேர்ந்த திருநாவுக்கரசு சுஜீவன் (வயது 16) என்று சிறுவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

விமானப்படை சாரதி கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று செவ்வாய்க்கிழமை (24) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts