Ad Widget

சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகத்தில் இளைஞர் கைது!!

13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 27 வயதான இளைஞர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்டுகின்றது.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தின அச்செழு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆலயத் திருவிழாக்களின் போது சிறுமியின் தாயார் கச்சான் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு உதவியாகக் குறித்த இளைஞன் இருந்தார் என்றும் தாயார் இல்லாத சமயம் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை இன்று சனிக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts