Ad Widget

சிறுமியை காணவில்லையென முறைப்பாடு

யாழ்.கெருடாவில் மாயவனூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை புதன்கிழமை (17) முதல் காணவில்லையென சிறுமியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

உடுப்பிட்டியிலுள்ள சமுர்த்தி வங்கிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லையென சிறுமியின் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts