Ad Widget

சிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் சி.சிவமோகன்

sivamokanசிறுபான்மையின மக்கள் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதுடன் குறிப்பாக தமிழினம் இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்காதவை என வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது.

சித்திரவதைகளுக்கு உள்ளானோர் இன்று இன மத பேதன்றி மன ரீதியாக பாதிக்கப்பட்டு தமக்குள்ளேயே உளக்குமுறல்களை அடக்கிக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழினம் இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்காதவை.

பூரண அரசியல், பொருளாதார, சுயகௌரவ, சுயபாதுகாப்பு உரிமைகளுடன் வாழ ஆசைப்பட்ட தமிழினம் இன்று அடக்குமுறைகளுக்குள் சிக்கித்தவித்து வருகின்றது. அளவுக்கதிமான இராணுவ பிரசன்னமும் புலனாய்வு எனும் போர்வையில் இறக்கிவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான அடையாளம் தெரியாத நபர்களும் மக்களை இன்று சுதந்திரமாக வாழவிடாது ஒருவித உளவியல் சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர்.

இன்று யுத்தம் முடிந்து சமாதான பூமியில் அனைத்து அடக்கு முறைகளையும் நீக்கி நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ வழிவிடுவதே சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். எனவே அரசு இந்நாளிற்கு ஆதரவு வழங்கி செயற்பட வேண்டும்’ என் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts