Ad Widget

வேலணை சிறுதீவில் உல்லாச ஹோட்டல்

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிறு தீவில் பாரிய உல்லாச ஹோட்டல் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

seeru-thevu

யாழ்.குடாநாட்டில் உல்லாச பிரயாணத் துறையை ஊக்குவிக்கும் வகையில் இம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேற்படி ஹோட்டல் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும் நாட்டி வைத்தனர்.

நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி, ஹோட்டல் உரிமையாளர் திரு.கணேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts