Ad Widget

சிறீசம்போதி மகாவிகாரை அமைக்கும் பணி முழுவீச்சில்[படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படையினர் காவலுடன்அமைக்கப்பட்டு வரும் விகாரையில் முதற்கட்டமாக இன்று மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

mullaiththeevu-puththar-1

கொக்கிளாய் பகுதியில் ஏற்கனவே புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டதை நாம் அறிந்திருப்போம். தற்போது அதற்கருகாமையில் மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டு, சிறீ சம்போதி மகா விகாரை என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது

mullaiththeevu-puththar-3

அதுமட்டுமின்றி, இதற்காக கொக்கிளாய் ஆரம்ப வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 30 m அகலமும் 100m க்கும் மேற்பட்ட நீளமும் உடைய நிலப்பகுதி அபகரிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்காக தனியார் காணி அபகரிக்கப்பட்டிருந்தது. குறித்த பொதுமகன், தனது காணி அபகரிப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு சிலையை நிறுவி விகாரையை அமைக்கும் பணி அப்பட்டமான சட்டமீறல் என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

mullaiththeevu-puththar-2

Related Posts