Ad Widget

சின்னங்களைப் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்: அங்கஜன்

சின்னங்களைப் பார்க்காமல் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களித்தால் யாழ்ப்பாணம் முன்னேறும் என இலங்கை சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இம்முறை தேர்தலில் உண்மையானவர்களையும், நேர்மையானவர்களையும் சுதந்திரகட்சியின் சார்பில் தேர்தலுக்காக களமிறக்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்பு மாற்றத்திற்காக தேர்தலே நடத்தப்படவுள்ளது எனவும், மக்களுக்கான தீர்வே இந்தத் தேர்தல் எனவும் வழமையைப்போன்றே இம்முறையும் சிலர் பொய்களைப்பரப்பிவருகின்றனர் அவ்வாறானவர்கள் மக்களுக்கு உண்மைகளைக் கூறி போட்டியிடவேண்டும் எனவும் அங்கஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உண்மையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எனப்படுவது நகரங்களையும், கிராமங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான தேர்தல் மட்டுமே இது எனச் சுட்டிக்காட்டிய அங்கஜன், இம்முறை மக்கள் விழிப்படைந்து உள்ளார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts