வல்வெட்டித்துறைச் சிதம்பரக் கல்லூரியின் கணினி அறையின் ஜன்னல் கண்ணாடிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) இரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்று புதன்கிழமை (16) தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் கணினி அறையின் 9 ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது சம்பவம் தொடர்பில் கல்லூரி அதிபர் சி.இராஜதுரை நேற்று புதன்கிழமை (16) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.