Ad Widget

சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள்: இராணுவ கட்டளைதளபதி

தெற்கு சிங்கள மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள், நல்லவர்கள் எனினும் கடந்த 30 வருட யுத்தம் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது. எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்

30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள் பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள். தற்போதைய இளைஞர் யுவதிகளுக்கும் நான் ஒன்றை கூற விரும்புகிறேன்.

இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள் இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். எனவே வடக்கு இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து இந்த நாட்டிற்கு சேவையாற்ற முன்வாருங்கள்” என கூறினார்.

Related Posts