Ad Widget

சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Cahavakachchereiசாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்ட மக்கள் தமக்கு “சொந்த காணி வேண்டும்”, “50 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம்”, “எமக்கு தீர்வு எப்போது?” , “அரச அதிகாரிகளே நீங்கள் வந்து எமது குடியிருப்பை பாருங்கள்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 8.30 மணியில் தொடக்கம் நூற்றுக்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts