கொழும்பில் இருந்து பளை வரை சேவையில் ஈடுபட்டு வரும் யாழ்தேவி இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரி வரை தனது சேவையை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பளையில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி நேற்று காலை சாவகச்சேரி புகையிரத நிலையம் வரை தனது பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டிருந்தது.
கால் நூற்றாண்டிற்கு பின்பு முதன் முதலில் யாழ்தேவி சாவகச்சேரியை நோக்கி வந்ததை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.