Ad Widget

சாரதி பயிற்சி நிறுவனத்தின் வாகனம் மோதி முதியவர் சாவு!

சாவகச்சேரிப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட முதியவரை வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாகவகச்சேரி ஏ9 வீதியில் வீதியைக் கடக்கமுற்பட்ட முதியவரை தனியார் சாரதி பயிற்சி நிறுவனத்தின் வாகனம் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

சரசாலை வடக்கைச் சேர்ந்த ஏ.நல்லதம்பி (வயது 75) என்பவரே உயிரிழந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts