Ad Widget

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார்

icrc_CIமுன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கத் தயார் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவி சிரினி போலினி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கைதிகள் விவகாரம் காணாமல் போனவர்கள் விவகாரம் போன்றன தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts