Ad Widget

சமஷ்டியைத் தோற்கடிக்கவா புதிய அரசியல் கூட்டணி?

சமஷ்டித் தீர்வு திட்டத்திற்கு எதிராக செயற்படுவதற்கா புதிதாக, ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வட மாகாண சபையும், தமிழ் மக்கள் பேரவையும் தேசிய இனப்பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன. இந்த தீர்வை திட்டத்திற்கு எதிராக பேசுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சிலரை தயார் செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts