Ad Widget

சந்திரிகாவுடனேயே எனக்கு போட்டி – ஜனாதிபதி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (05), அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

HE-Media_Discusion-1

‘நான் போட்டியிடுவது சந்திரிகாவுடனேயே. இது மங்கள – சந்திரிகா ஒற்றுமையாகும். ரணிலுக்கு இன்னும் சில நாட்களில் டும் தான். என்னோடு போட்டியிடத் தகுதிவாய்ந்தவர் ரணில் என்றே நான் நினைக்கிறேன்’ எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர்களால் அமைச்சரவை கூட்டத்தக்கு அனுப்பி வைக்கப்படும் ஃபைல்கள் குறித்தே நான் அன்று கூறினேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அமைச்சர்களால் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் ஃபைல்கள் இருக்கின்றன. நான் அந்த ஃபைல்கள் குறித்தே தெரிவித்திருந்தேன். கெபினட் பத்திரமொன்றை வெளியிட முடியாது தானே. ஆவை இரகசியமானவை தானே.

ஆனால், நான் சொன்னதை ஊடகங்கள் மாறி விளங்கி வெளியிட்டன. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு இதைப்பற்றி விசாரித்திருந்தால் நான் விளக்கம் கொடுத்திருந்திருப்பேன்’ என ஜனாதிபதி மேலும் கூறினார்.

Related Posts