Ad Widget

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளங் காணப்பட்டார்

dead-footவடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் வியாழக்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலை பைங்கூரம் காலணியினைச் சேர்ந்த சின்னவன் மனோகரி (65) என அடையாளங் காணப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், தனது சகோதரியுடன் குறித்த பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், இவரது சகோதரி கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கொழும்பு சென்றமையினால் குறித்த பெண் வீட்டில் தனிமையிலே வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்பதுடன், இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

வடமராட்சியில் உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Related Posts