Ad Widget

சகல சிம் அட்டைகளும் இவ் வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்

sim-cardஇலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் கையடக்க தொலைபேசிகளின் சகல சிம் அட்டைகளும் இவ் வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கல்கமுவ – மீகலேவ பிரதேசத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தி சிம் அட்டைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற யோசனைகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது 21 மில்லியனுக்கு மேற்ப்பட்ட கையடக்க தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட தெரிவித்தார்.

புதிதாக வழங்கப்படும் சிம் அட்டைகள் மூன்று நாட்களிற்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்ன வழங்கப்பட்ட பெரும் தொகையான சிம் அட்டைகள் பதிவு செய்யபடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts