Ad Widget

கோப்பாய் பொலிஸ் மீது தாக்குதல்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூன்று சந்தேகநபர்களை வியாழக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

கோண்டாவில் பகுதியை சேர்ந்த மருத்துவமாதுவுக்கு மதுபோதையில் வீதியில் நின்றிருந்த மூன்று பேர் தகாத வார்த்தைகளால் பேசி, அவருடை விழிப்புலனற்ற கணவரை கடுமையாகத் தாக்கியதாக மருத்துவமாது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் மூன்று சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்ய முற்பட்ட போது, மூவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

உடனடியாக மூவரும் கைது செய்யப்பட்டதாகவும், மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

Related Posts