Ad Widget

கோப்பாயில் கஞ்சா, வாளுடன் அறுவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார்.

arrest

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் அதிகாலை பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின்போது ஆறு இளைஞர்களை கைது செய்திருக்கிறோம்.

அவர்களிடம் நடத்தப்பட்ட உடனடி விசாரணைகளில் மூவரிடம் வாள்கள் உள்ளமை கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Related Posts