Ad Widget

கோப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு திருமலையில் ஆதரவு

கோப்பாபுலவு நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 4.00 மணியளவில் திருகோணமலை – சிவன்கோவிலடிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, திருகோணமலை பசுமை இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

வாழ்வாதார இடங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும், தங்களின் அடையாளங்களோடு தங்களுடைய மண்ணில் வாழ்வதற்கான நியாயமான கோரிக்கைகளின் போராட்டமாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.

Related Posts