Ad Widget

கோட்டாபய விரைவில் கைதாவார்?

காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் தேசிய நிறைவேற்று அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

Koththapaya-raja

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் பெரும் மோசடிகள் இடம்பெற்றன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

‘அவன்ற் கார்டே’ நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும்வரை, கோட்டாபய ராஜபக்‌ஷ உட்பட நான்கு பேர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையின் பிரகாரமே காலி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே, நேற்று புதன்கிழமை தேசிய நிறைவேற்று அதிகாரசபைக் கூட்டத்தில், இந்த ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

“காலியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலை விவகாரத்தை மூடிமறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றன. குறித்த நிறுவனம் அரசு போல் செயற்படுகிறது. இதில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இதன் பின்னர் கோட்டாபய கைதாவதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது. காரணம், அந்தளவுக்கு ஊழல்கள் இடம்பெற்றுள்ளன” என்று தேசிய நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Related Posts