கொழும்பு – கண்டி பிரதான வீதி நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்து இன்று காலை 7.15 அளவில் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 11 பேர் வத்துபிட்டபவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.