Ad Widget

கொழும்பு- யாழ். நகர்சேர் கடுகதி சேவையில் இன்று முதல் 2ஆம்,3ஆம் வகுப்புகள் இணைப்பு!!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் சேவையில் ஈடுபடும் தொடருந்தில் இன்று முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இந்த தகவலை யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்.

இந்த சேவை தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை புறக்கோட்டையில் அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் தொடருந்து யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு கொழும்பு புறப்படும்.

இந்த சேவையில் இதுவரை குளிரூட்டப்பட்ட வகுப்புகளே காணப்பட்டன. எனினும் இன்று முதல் இந்த சேவையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணிகள் ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் வகுப்புக்கு 1,000 ரூபாயும் மூன்றாம் வகுப்புக்கு 700 ரூபாயும் கட்டணம் அறவிப்படும்.

இந்த புதிய சேவை இன்று அதிகாலை கல்கிசையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வடக்கு மாகாண மக்களுக்கு நன்மையளிக்கும்- என்றார்.

Related Posts