நாட்டில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பகுதிகள் இன்று காலை 6.00 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அம்பறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நுவரெலியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 கிராம சேவகர் பிரிவுகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது.
இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.