Ad Widget

கைவிடப்பட்ட காணியிலிருந்து சடலம் மீட்பு

சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியிலுள்ள கைவிடப்பட்ட காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் திங்கட்கிழமை (06) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காணிக்குள் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts