Ad Widget

கையெழுத்து போராட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து போராட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (13) முன்னெடுக்கப்படுகின்றது.

‘குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!’, ‘காணாமற்போனோர், கடத்தப்பட்டோரின் விபரங்களை வெளிப்படுத்து!’ மற்றும் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்!’ ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிச கட்சி கூறியது.

Related Posts