Ad Widget

கைதடி பாலத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்

accidentலொறி மற்றும் ஹென்டர் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து யாழ். கைதடி பாலத்திலேயே நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பாலத்தில் சென்றுகொண்டிருந்த லொறி வீதி சமிஞ்சை குறியீடு பதிக்கும் ஹன்டர் வாகனத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ஹென்டர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். கைதடி பாலத்தில் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பாலம் வழுக்கும் தன்மை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வேகக்குறைப்பு சமிஞ்சைகள் இருக்கின்றபோதிலும் வாகன சாரதிகளின் கவனயீனத்தினால் இந்த பாலத்தில் அதிக விபத்து சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts