Ad Widget

கைகலப்பில் இ.போ.ச. சாரதி காயம்

யாழ்ப்பாணம் – நெல்லியடி வழித்தட சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் இருவருக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற கைகலப்பில், பேருந்து சாரதி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன் குடத்தனையை சேர்ந்த சுப்பிரமணியம் வசந்தகுகன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே நேரத்தில் புறப்படும் தனியார் பஸ் வண்டி மற்றும் இ.போ.ச. பேருந்து சாரதிகளுக்கு இடையில் முறுகல் நிலையேற்பட்டது. இந்த நிலையில், இருவரும் நெல்லியடி சந்தியில் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts