Ad Widget

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

4 கிலோ கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

யாழ். சாவகச்சேரி கோவிலாக்கண்டி பகுதியைச் சேர்ந்த இவர் 5 இலட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கேரளா கஞ்சாவினை அரியாலை, பூம்புகார் பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.

கஞ்சாவினை வாங்க வருவதாக கூறிய நபர்களுக்காக காத்திருந்த வேளையில், யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோவின் தலைமையிலான விசேட புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டார்.

இவரை விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts