Ad Widget

கூரையில் ஏறி முதியவர் போராட்டம்!

தனக்கு சொந்தமான காணியை தன்னிடம் வழங்குமாறு கோரி முதியவர் ஒருவர் வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் உள்ள கூரையின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட வேவத்தெக விக்கிரமசூரிய தெரிவிக்கையில், வவுனியா, நெடுக்குளம், மினிமறிச்சகுளம் பகுதியில் எனது தந்தைக்கு ஓர் ஏக்கர் வயல்காணி இருக்கிறது.

அந்தக் காணி அவருக்கு பின் எனக்கு என உறுதியில் எழுதப்பட்டுள்ளது. எனது அந்தக் காணிக்குரிய ஆவணங்கள் என்னிடம் உள்ள போதும் அதனை வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தினர் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.

எனவே எனது காணியை மீட்டுத் தருமாறே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். பிரதேச செயலக வளாகத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தின் கூரை மேல் ஏறியே குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts