Ad Widget

கூட்டமைப்புக் குழு விரைவில் டில்லிக்கு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

sambanthan-viky-suresh-adaikkalam-mavai

இரா.சம்பந்தன் எம்.பி.யுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா எம்.பி., சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி., செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோரே விரைவில் இந்தியா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று புதுடில்லிக்கு விஜயம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts