Ad Widget

குழந்தையை தாக்கிய தந்தை தலைமறைவு

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியில் சனிக்கிழமை (9) இரவு தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாக பிடித்து தாக்கியதுடன், மனைவினையும் கடுமையாக தாக்கிய நபர் தலைமறைவாகியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தனர்.

இதில், படுகாயமடைந்த இராஜேஸ்வரி தமிழ்ச்செல்வி (வயது 27) மற்றும் அவரது குழந்தை ஆகியோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியுள்ள நபரைத் தேடிவருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts