Ad Widget

குளத்தில் மூழ்கி யுவதி உயிரிழப்பு

வேலணை மேற்கு சங்கத்தார் கேணிக்குளத்தில் நண்பிகளுடன் குளிக்க சென்ற யுவதி, நீரில் மூழ்கி நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த சுரேஸ் வினோஜா (வயது 16) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குளித்துக்கொண்டிருந்த போது யுவதி, ஆழமான பகுதிக்கு சென்றதன் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts