Ad Widget

குருநகர் பகுதியில் வாள் வெட்டு: இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அரியாலை மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச்சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குருநகர் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 24 வயதான அன்டன் சுரேந்திரன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த கைக்கலப்பு ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts