Ad Widget

குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக கனகா நியமனம்

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக திருமதி கனகா சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் நீதிச் சேவை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இவர் முன்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றியவர். பருத்தித்துறையைச் சேர்ந்த இவர், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts