Ad Widget

குடிநீர் போத்தல்கள் பரிசோதனைக்கு

சிறுநீரக நோய் அதிகளவில் பரவும் வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களின் தரங்களை பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

குறித்த குடிநீர் போத்தல்களின் தரம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்த முறைப்பாடுகளுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில், குறித்த மாகாணங்களின் விற்பனை செய்யப்படும் சுத்தமான குடிநீர் போத்தல்களின் மாதிரிகள் அரச பகுப்பாய்வு மற்றும் பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவத்திற்கு அனுப்பப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Posts