Ad Widget

குடாநாட்டில் டெங்குத்தொற்று தீவிரம் : சிறுவன் உயிரிழப்பு!!

டெங்குத்தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.யாழ். குடாநாட்டில் டெங்குத்தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நேற்று 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஈரல், சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளான்.

நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ். மீனலக்‌ஷன் என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான்.

கடந்த 13 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

எனினும் காய்ச்சல் குறைவடையாத நிலையில் 17 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

ஈரல், சிறநீரகம் என்பன முழுமையாக செயலிழந்தமை மருத்துவபரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட போதும் உயிரைக்காப்பாற்றமுடியவில்லை.

Related Posts