Ad Widget

குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றங்கள்! : நீதிபதி இளஞ்செழியன் தீவிர அக்கறை

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இச்சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்நிலையில், இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில், அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்தும் பங்கேற்றிருந்தார்.

குடாநாட்டில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு சம்பவங்கள், மக்கள் மத்தியில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதோடு, இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts