Ad Widget

கிளி. தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினார்கள்.

kilinochchi-teachers-prot

யாழ். செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தை நேற்று காலை 10 மணி அளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினார்கள்.

மிக நீண்ட காலமாக நிரந்தர நியமனம் கிடைக்காமல் குறைந்த ஊதியத்திற்கு தொண்டராசிரியராகவே கடமையாற்றி வருவதாகவும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரியே போராட்டம் நடாத்தியதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இது தொடர்பில் தம்மை கல்வியமைச்சின் செயலாளர் அழைத்து கலந்துரையாடியதாகவும் அதன் போது அவர் தாம் மத்திய அரசாங்கத்தின் ஆணைப்படியே செயற்படுவோம், தம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது என தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Related Posts