Ad Widget

கிளிநொச்சியில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) , இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அங்கஜன் ராமநாதன், வடமாகாண பதில் முதலமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம அறிமுக உரையுடன் ஆரம்பமான இந்த கூட்டத்தில்,

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் வயல்கள் அழிவடைந்துள்ள நிலையில் எஞ்சிய வயல்களை எவ்வாறு பாதுகாப்பது, வரட்சியினால் வரும் மாதங்களில் மக்கள் எதிர்கொள்ளவுள்ள உணவு தட்டுப்பாடு, தொழிலின்மை, சுகாதார பிரச்சினைகள், குடிநீா் பிரச்சினை, மின்சாரம்,நன்னீர் மீன்பிடி பாதிப்பு, போன்ற விடயங்கள் தொடா்பிலும், கால்நடைகள் மற்றும் வனவிலங்களுக்கான குடி நீா் ஏற்பாடுகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டது.

மேலும் மேற்படி பிரச்சினைகள் எதிர்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அதற்கான மாற்று நடவடிக்கைகள் பற்றியும் அதனை எந்ததெந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நேற்றய விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், பசுபதிபிள்ளை. மாவட்ட மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்,பிரதேச செயலாளா்கள், திணைக்களங்களின் தலைவா்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலா் கலந்துகொண்டனா்

Related Posts