Ad Widget

கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தை புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினரால் குறித்த பணி தடுத்து நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலரால் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts