Ad Widget

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ”நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கடிகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.

Related Posts