Ad Widget

கிளிநொச்சியில் எழுச்சியுடன் நிகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா நேற்று வியாழக்கிழமை (01-05-2014) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.

ஸ்கந்தபுரத்தில் அமைந்துள்ள கரைச்சி பிரதேச சபையின் வளாகத்தில் அப்பிரதேச சபையின் உறுப்பினர் சு.தயாபரனின் தலைமையில் நடைபெற்ற இத் தமிழ்த் தேசிய மேதின விழாவில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை மற்றும் ப.அரியரத்தினம், கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா.வை. குகராஜா, மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.தனிநாயகம் ஆகியோருடன் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக விவசாய மற்றும் கடற்றொழிலைப் பிரதிபலிக்கும் ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதே சமயம் பரந்தன் சந்தியில் கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளனம் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்திருந்தது. இதற்காக கிளிநொச்சி காவல் நிலையத்தில் அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன் கிழமை இரவு இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தினரிடம் சென்ற காவல்துறையினர் அந்த அனுமதியை மீளவும் பறித்துச் சென்றதாகவும் பின்னர் நேற்று பிற்பகல் (01-05-2014) காவல்துறையினரால் மீளவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார்.

01

04

05

07

11

12

13

14

Related Posts