Ad Widget

கிரேனைட் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

Hand-bombஎழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறை புகைக்கூட்டிலிருந்த கிரேனைட் வெடித்ததால் படுகாயமடைந்த அதேயிடத்தைச் சேர்ந்த சந்திரகுமார் பிரதீபன் (வயது 22) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் புகைக்கூட்டை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது, இக் கிரேனைட் குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த இவர் உடனடியாக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த மேற்படி பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேறுவதற்கு 2012ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts